districts

img

சென்னைவாசிகளின் சேவைக்கு அங்கீகாரம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கவுரவிப்பு

சென்னை, ஆக. 31 - கொரோனா, இயற்கை பேரிடர் காலத்தில் மாநக ராட்சியுடன் இணைந்து பணி யாற்றிய சமூக ஆர்வல ர்கள், மாநகராட்சி ஊழியர்க ளுக்கு மாமன்ற உறுப்பி னர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப் படுகிறது. இதனையொட்டி கோவிட் தொற்று, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மாந கராட்சியுடன் இணைந்து பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கவுரவிக்கப் படுகின்றனர். “சென்னைவாசிகளின் சேவையை அங்கீகரிக்கும் விழா” என்ற பெய ரில் நடைபெறும் இந்நிகழ் வானது மாநகராட்சி பூங்காக் களில், மாமன்ற உறுப்பி னர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக 41வது வட்டம் நேரு நகர் பூங்காவில், தண்டை யார்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் தலைமையில் பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பூங்காக்களில் பொதுமக்களின் பயன்பாடு எந்த அளவில் உள்ளது. எத்தகைய வசதி கள் பூங்காக்களில் தேவைப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, மாநகராட்சியின் www.chennaicorpo ration.gov.in  இணையதளத்தில் Parks survey என்ற இணைப்பின் மூலம் கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்த இணைப்பில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.