சுடர் தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான தமிழ்செல்வி கடந்த 21 ஆண்டில் 252 கண் சிகிச்சை முகாம்களை நடத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் வகையில் அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர் அத்தியா அகர்வால் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். அண்மையில் கிரீம்ஸ்சாலையில் உள்ள இஆர்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாதர்சங்க நிர்வாகிகள் மீனாட்சி, ஜமுனா,மோகனா ஆகியோர் பங்கேற்றனர்.