districts

நோயாளி கவனிப்புப் படி நிலுவைத் தொகையை வழங்கிடுக

புதுச்சேரி, ஜூன் 2-

     நோயாளி கவனிப்பு படி நிலுவைத் தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சம்மேளனம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் அமைப்பு செயலாளர், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

    7ஆவது ஊதியக் குழு பரிந்துரை யின் அடிப்படையில் சுகாதார ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டிய நோயாளி கவனிப்பு படி  மற்றும் செவிலிய படி ஆகியவற்றை உயர்த்தி வழங்க கோரி, சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதன் காரணமாக, அனைத்து பிரிவு சுகாதார ஊழியர்களுக்கும், ஊதியத்தில்  படியை உயர்த்தி வழங்க அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.‌ இந்த அரசாணை பிறப்பிக்க நட வடிக்கை எடுத்த, முதல்வருக்கும், சுகா தாரத்துறை மற்றும் நிதித்துறை அதி காரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

   மேலும் சுகாதார ஊழியர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய அலவன்ஸ்களை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில், 9.5.2023 அன்று  பட்ஜெட் அதிகாரி ஒரு ஆண்டிற்கு தேவையான ரூ. 8.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு, பின்னர் 16.05.2023 அன்று, நிதித்துறையின் உடன்பாடு அளிக்கப்பட்டு, நமது சுகாதார செயலகத்திற்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. அந்த கோப்புக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது ஜூன் மாதம் முதல் மாத ஊதியத்தில் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது அரசின் நிதிநிலை சரி யில்லாத காரணத்தால் நிலுவைத் தொகை வழங்க சாத்தியக்கூறு இல்லை என்பதால், அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், மாத ஊதியத்தில் மட்டும் உயர்த்தி வழங்குவதை ஏற்றுக்கொண்டு உள்ளது.

   எனவே நோயாளி கவனிப்பு படி மற்றும் செவிலிய படி ஆகிய வற்றிற்கான நிலுவைத் தொகையை அரசு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.