பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தை அடுத்த கோழிவாக்கம் மற்றும் கீழம்பி ஆகிய பகுதிகளில் செயல்படும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு உள்ள வசதிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.