districts

சென்னை முக்கிய செய்திகள்

நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்:  ஆய்வில் தகவல்

சென்னை, பிப்.22- இந்தியாவில், நான்கில் ஒருவருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்,  இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ  கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் நடந்தது.  இந்த மாநாட்டில் நாடு முழுதும் உள்ள  நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் பங்கேற்ற னர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு  கட்டுரை ஒன்றில், ‘இந்தியாவில் நான்கில்  ஒருவர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், நோய் பாதித்தவர்களில், 7 விழுக்காடு பெண்க ளும், 6 விழுக்காடு ஆண்களும் மட்டுமே,  முறையாக மருந்துகளை எடுத்துக்  கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. முறையாக மருந்துகளை எடுத்து கொள்ளாததால், பல்வேறு வித மான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், முறையாக மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், ஒன்றிய அரசு சிறப்பு  திட்டம் செயல்படுத்தி வருகிறது என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய சுகாதார  மற்றும் குடும்ப நல அமைச்சக துணை தலைமை இயக்குநர் , சுதர்ஷன் மண்டல் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாடு  முழுதும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். தேவைப்படும் மருத்துவ வசதிகளை, மக்களின் இருப் பிடத்திற்கே கொண்டு செல்கிறோம். இதன் வாயிலாக, 2025ம் ஆண்டுக்குள், 25 விழுக்காடு உயர் ரத்த அழுத்த நோயை குறைக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது. உயர் ரத்த அழுத்த நோய்க்கு  எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது பரிசோதிக்கவில்லை எனில், கண்டு பிடிக்கவே முடியாது. இதற்கான மருத்துவம்  எளிமையானது என்றாலும், மருத்துவ முறையை முழுமையாக பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, பொது மக்கள் அவ்வப்போது, உயர் ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதுடன், முறையாக மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாலாற்று தரைப்பாலம் சீரமைப்பு

காஞ்சிபுரம்,பிப்.22- வடகிழக்கு பருவ மழை யின் போது பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த மண்சாலை மழைக் காலத்தில் தாக்கு பிடிக் காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகை யில் புதிய தரைமட்ட பாலம்  4 கோடி ரூபாய் செலவில்  கட்டும் பணி தொடங்கப் பட்டுள்ளது. ஆற்றில் கரை  புரண்டு வெள்ளம் சென்றா லும் தண்ணீர் செல்லும் வகை யில் 240 சிமெண்ட் குழாய் கள் பதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆற்றில் வெள் ளம் ஏற்படும் போது தண்ணீர்  பிரிந்து செல்லும், பாலத் திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள்  தெரி வித்துள்ளனர்.

தீ விபத்து

சென்னை,பிப்.22- சென்னை ராயப்பேட் டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகத்தில் புதனன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில் ஏற்பட்ட தீயை மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள்  அணைத்தனர்.

சென்னையில் பரவும்  வைரஸ் காய்ச்சல்

சென்னை,பிப்.22- சென்னையில் பெரும்பாலானவர்களிடையே வைரஸ் காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் ஏற்படுத்துகிறது.கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு  எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது. அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரண மாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ்  என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்திவருகின்றனர். இதனால் ரத்த  பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மகனை கொன்று  தம்பதியர் தற்கொலை

திருவள்ளூர்,பிப்.22-  வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன் (வயது 34).  சமையல் செய்யும் பணியை ஆர்டர் எடுத்து செய்து வந்தார். இவரது மனைவி  நித்யா (30). இவர்களது மகன் ஹேமந்த்குமார் (வயது 6). இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமந்த்குமார் குடும்பத்துடன் திருவள்ளூர் அருகே உள்ள  மப்பேடு, வாசனாம்பட்டு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து ஓர் அறையில் தங்கினர். புதனன்று  காலை நீண்ட  நேரம் ஆகியும் கலையரசன் குடும்பத்தினர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  மாமனார் அறைக்கு சென்று பார்த்த போது கலையரசனும், நித்யாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர். அருகில் உள்ள படுக்கையில் பேரன் ஹேமந்த்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கலையரசனும், நித்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது குறித்து மப்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  இறந்துபோன 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோத னைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 2 பேர் பலி

திருவள்ளுர்,பிப்.22- கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி புதனன்று அதிகாலை  சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ  மீது பின்னால் மரப்பலகைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து  மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தேவராஜ்  என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் திவாகர் வாசு என்பவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த போது லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரி ழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் ரத்தினம் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலத்த காயம்  அடைந்த ரத்தினம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரு கிறார். ஆரம்பாக்கம் காவல்துறையினர்  பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பூமி ஆரம்பாக்கம்  காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பெண் மீது முட்டை வீசி  நகை அபகரிப்பு

தாம்பரம்,பிப்.22- நடைபயிற்சி சென்ற  பெண் மீது கொள்ளையர்கள் முட்டையை வீசி நகை பறித்துச் சென்ற சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது. தாம்பரம் அடுத்த மாட ம்பாக்கத்தை சேர்ந்தவர் கவிதா (58). இவர் அருகே உள்ள கரு மாரியம்மன் கோவில் தெருவில் நடைபயிற்சி செய்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் திடீரென கவிதா மீது முட்டையை வீசினர்.  இதனால் கவிதா நிலை தடுமாறினார். அதற்குள் கொள்ளையர்கள் இருவரும் கவிதா அணிந்து இருந்த 6 சவரன்  நகையை பறித்து  தப்பி சென்றுவிட்டனர். நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வர்கள் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது.

‘இதய பராமரிப்பு மையம்’ துவக்கம் 

சென்னை, பிப்.22– இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப் படும் நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் விதமாக வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா குளோபல் கேம்பஸ்  மருத்துவமனை கேத்லேப் மற்றும் இதய நோய்க்கான தீவிர சிகிச்சை பிரிவுடன் நவீன மேம்படுத்தப்பட்ட ‘இதய பராமரிப்பு மையத்தை’ திறந்துள்ளது.  இந்த மையத்தை திருவள்ளூர் ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து  வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரவிந்த் ஐ கேர் சிஸ்டம்ஸ் திட்ட இயக்குனரும், சென்னை  அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் எஸ்.  அரவிந்த் மற்றும் நடிகையும், எழுத்தாளரும்,  தொழில்முனைவோருமான அனு ஹாசன்,  மருத்துவமனையின் மருத்துவ இயக்கு னர் டாக்டர் கண்ணன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.  இந்த புதிய மையம் குறித்து டாக்டர் மேத்தா இருதய அறிவியல் துறை பிரிவின் நுண்துளையீட்டு இருதயநோய் நிபுணர் டாக்டர் நரேந்திரன்  கூறுகையில்,  வாரத்தில் 7 நாளும் செயல்படும் இந்த மையத்தில் மேம்படுத்தப்பட்ட ஜிஇ கேத்லேப், இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அவசரச் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நுண்துளையீடு இல்லாத 2டி எகோ, டிஎம்டி, 24 மணிநேர கண்காணிப்பு வசதி  மற்றும் ஈசிஜி ஆகிய வசதிகள் உள்ளன.  இதயம் சார்ந்த கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு அவற்றை கண்டறிவதற்கு வசதிகாக இம்மையத்தில் டாக்டர்களுக்கு உதவிடும் வகையில் ஏராள மான நவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகள்  உள்ளன. இதய சம்பந்தமான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற் கான தகுந்த சிகிச்சை இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில்  நாளை கருத்து கேட்பு

புதுச்சேரி,பிப்.22- புதுச்சேரி அரசின் கட்டுபாட்டிலுள்ள மின்துறை ஆண்டு தோறும் கட்ட ணத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான கட்ட ணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. வீட்டு உபயோகம் யூனிட்டுக்கு ஒன்றுக்கு 45 காசு களும், வர்த்தக பயன்பாட்டிற்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகள் வரை உயர்த்த முடிவு செய்து,  அதற்கான ஒப்புதல் வழங்குமாறு  இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை அனுமதி கோரியுள்ளது. கோவா மற்றும் யூனியன் பிரதே சங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மின்துறை மற்றும புதுவை பவர் கார்ப்பரேசனின் வருவாய் தேவை மீது வெள்ளியன்று (பிப். 24)  பொதுமக்களின் கருத்து கேட்புக்கூட்டம் பி.எம்.எஸ்.எஸ்.எஸ் கருத்தரங்க கூடத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் அரங்கிற்கு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக வந்து தங்களது பெயர் மற்றும் முழு முகவரியை பதிவு செய்ய வேண்டும். மின்கட்டணம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு தங்களது கருத்துக்களை தெரிவிக்களாம் என்று புதுச்சேரி மின்துறையின் கண்கானிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்களிடம் 7 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி

திருவண்ணாமலை, பிப். 22- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு 7 நாள் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தர விட்டது. திருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து ரூ.72 லட்சத்து 78 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35), ஆஜாத் (37) ஆகியோரையும் ஆஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர் உசேன் (26) உள்ளிட்ட 4 பேரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் அரியானா கொள்ளையர் களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் திரு வண்ணாமலை நகர காவல்துறையினர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை புதன்கிழமை (பிப்.22) நடைபெற்றது. கொள்ளையர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 7 நாள் அவ காசம் அளித்து  நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். விசாரணை முடித்து மீண்டும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

ரேசன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி,பிப் 22- கிருஷ்ணகிரியில் அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள திருமலை நகரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்புக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் சோதனை செய்த போது 41 மூட்டை களில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணிவண்ணன் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் வாலிபர் பலி

திருவண்ணாமலை, பிப். 22- ஜார்க்கண்ட் மாநிலம் கலகாபாத், கிரிதிக் பகுதியை சேர்ந்தவர் சுகன்மாஞ்சி. இவரது மகன் தீபக் (23). இவர் வெம்பாக்கம் அடுத்த நர்சம்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெறும் கட்டு மான பணியில் வேலை செய்து வந்தார். திங்களன்று (பிப். 20) கடை யில் பொருட்கள் வாங்குவதற்காக நர்சம்பேட்டை கிரஷர் ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த அடையாள தெரி யாத வாகனம் தீபக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் புதன்கிழமை (பிப். 22) காலை பரிதாபமாக இறந்தார்.

ஒசூர் பி.எம்.சி.டெக் கல்லூரியில் செயற்கைக்கோள் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி,பிப். 22- ஒசூர் பெருமாள் மணி மேகலை பொறியியல் கல்லூரி வளாகத்தில், பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ)  ‘விண்வெளியில் செயற்கைக் கோள்கள்’ கருத்தரங்கம் நடை பெற்றது.  பிஎம்சி டெக் கல்லூரி நிறு வனத் தலைவர் பெ.குமார் தலைமை தாங்கினார். அப்போது, “ நவீன தொழில் நுட்பங்கள் மூலம் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி இஸ்ரோ உலக சாதனை படைத்து வருகிறது. மாண வர்கள் விண்வெளி பற்றி விழிப்புணர்வைப் பெற இது போன்ற கருத்தரங்கம் பெரிதும் பயன்படும்” என்றார்.  பெங்களூரு, இஸ்ரோ நிறுவன பொறியாளர் சீனி வாசன், விண்வெளி செயற்கைக் கோள்களை பற்றி விளக்கினார். கல்வி நிறுவன செயலாளர் பெ.மலர், இயக்குநர் பேராசிரி யர் சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பாலசுப்பிர மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெங்களூரு, இஸ்ரோ நிறுவனத்திலிருந்து  விண்வெளி விழிப்புணர்வு வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் விண்வெளிக்கு இந்தியா சார்பில் இதுவரை அனுப்பப் பட்ட ராக்கெட்டுகள் செயற்கை கோள்களின் மாதிரி வடி வங்கள் பார்வைக்கு வைகப்ப்பட்டி ருந்தது. இதுகுறித்து இஸ்ரோ பொறியாளர் சீனிவாசன் விளக்கினர்.

ஊத்தங்கையில் கோவில்களில்  தொடர் திருட்டு

கிருஷ்ணகிரி, பிப். 22- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு கரையோரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் பூட்டை உடைத்து 5 ஐம்பொன் சிலைகள், கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றனர். திருடிச்சென்ற  ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பதியில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவில்கள் பூட்டை உடைத்து 2 சவரன் நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.