சென்னை, ஆக. 23 -
குடிநீர் தனியார் மயத்தை கைவிட வேண்டும்,குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று (ஆக.23) சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
இதனையொட்டி வாயிற் கூட்டமும் நடைபெற்றது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, துணைச் செயலாளர் பி.சுந்தரம், சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி, பொருளாளர் ராஜன், துணைத்தலைவர் சி.சத்யநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
தனியார் மயமான தண்ணீர்
இதனைத் தொடர்ந்து வாரியத்தின் மேலான் இயக்குநர் கிர்லோஷ் குமாரை சந்தித்து சங்கத்தின் தலைவர்கள் மனுக்களை அளித்து பேசினர்.
அந்த மனுவில், மாநகராட்சியின் கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்ட லங்களில் தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளன. உலகவங்கி திட்டத்தின்படி, ஒரிசா நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பணிநிரந்தரம்
1200க்கும் மேற்பட்ட தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் 3 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரு கின்றனர். 480 நாட்கள் தொடர்ந்து பணி யாற்றிய தொழிலாளர்களை சட்டப்படி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரியத்தில் காலியாக உள்ள சுமார் 4500 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீரேற்று தொட்டி பணி யாளர், தினக்கூலி தொழிலாளி, வீராணம் திட்ட சில்ட் ஆட்டோ, ஜெட்ராடு ஓட்டுநர்க ளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தொழி லாளர் நலத்துறை சுற்றறிக்கை படி உயர்த்தி வழங்க வேண்டும், 8 மணி நேரம் பணி என்பதை உறுதி செய்வ தோடு, மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் தர வேண்டும், இரவு நேர தொழி லாளர்களுக்கு உணவு மற்றும் தேநீர் படி தர வேண்டும்,
களப்பணியாளர்களின் தினக் கூலியை 700 ரூபாயாகவும், சில்ட் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயிரத்து 100 ரூபாயாக வும், ஜெட்ராடு ஓட்டுநர்க ளுக்கு 1350 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களின் வருகை பதிவேடு, பணியிட பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். தொழிலாளர்கள், ஊழியர்கள் பயன்பெறும் வகையில் வாரிய தலைமை அலுவலகத்தில் கேன்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டிருந்தன.