districts

img

தனியார்மயத்தை கைவிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தனியார்மயத்தை கைவிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி என்எம்ஆர், தொகுப்பூதிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  அரசாணைப்படி நாளொன்றுக்கு 725 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.16) ரிப்பன் வளாகத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு, துணைப்பொதுச் செயலாளர்கள் ஜி.முனுசாமி, கே.தேவராஜ், டி.ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.