தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2016-ல் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எம்-2 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த திருத்தணி வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையை செவ்வாயன்று (நவ.28) மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் முன்னிலையில் திறந்து வைத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கெடுக்கும் பணியை பார்வையிட்டார்.