இந்தியா கூட்டணியின் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியார் சிலை எதிரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தராசன் பங்கேற்று பேசினார். முன்னதாக கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் சுதா, செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, பிரபுராஜ், கொளஞ்சியப்பன்,சத்யா உட்பட பலர் பேசினர். புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார் நடைபெற்றது.