திருவண்ணாமலை,பிப்.25- இந்தியாவில் பொதுத்துறை யாக உள்ள மின் துறையை தனி யார் வசம் செல்லாமல் தடுப்பதே மைய போராட்டமாக மறியுள்ள தாக, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். திருவண்ணாமலை, அவலூர் பேட்டை சாலையில் உள்ள தமிழ் மின் நகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் எஸ். பஞ்சரத்தினம் நினைவு, புதிய கூட்ட அரங்கத் திறப்பு விழா ஞாயிறன்று (பிப்.25) நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் கே. காங்கேயன் தலைமை தாங்கினார், வட்டச் செய லாளர் மு. பாலாஜி வரவேற்று பேசி னார். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் டி. ஜெய்சங்கர் சங்கக் கொடியை ஏற்றிவைத்தார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் புதிய கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்துவைத்தார். தோழர் டி.ஜானகிராமன் உருவ படத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமாரும், எஸ் பஞ்சரத்தினம் படத்தை சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா. பாரியும், ஆர்.குரு தேவன் படத்தை மாநிலப் பொரு ளாளர் எம். வெங்கடேசனும் திறந்து வைத்தனர். புதிய கூட்ட அரங்கை திறந்து வைத்து சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, ரயில்வேதுறை ஆகியவற்றை விற்கும் முயற்சி யில் ஈடுபட்டு வந்தாலும், தங்களை தேச பக்தர்கள் போல் சித்தரித்துக் கொள்கின்றனர். கோயில்களை கட்டுவதும், கோயில்களை நிர்வ கிப்பதும் அரசின் வேலை அல்ல. இதுவரை நடைபெற்ற யுத்தங்க ளில் மதக் கலவரங்களால் ஏற்பட்ட மரணங்களே அதிகம் என்பதால் தான், பல நாடுகளில் மதச்சார் பின்மையை போற்றிப் பாது காப்பதாக கூறினார். விவசாயிகள் பிழைப்பு தேடி யும் தொழிலாளர்கள் வேலை தேடி யும் தங்கள் இருப்பிடத்தை விட்டு அல்லாடி கொண்டே இருக்க வேண்டும்என்ற நோக்கத்திலேயே பாஜக அரசின் திட்டங்கள் உள்ளன. போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகள் மக்களுக்கான சேவை என்ற நிலையில் இருந்து தடம் புரண்டு வருகின்றன. அரசு அமைப் புகளில் ஊதிய வேறுபாடுகள் நாட்டு மக்களிடையே அதிக இடைவெளியை ஏற்படுத்துகிறது. தற்போது பொதுத்துறை மின்சா ரத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பது தேசத் தின் மையப் போராட்டமாக மாறி உள்ளது. பெரு முதலாளிகளை மிரட்டி தேர்தலுக்கான நிதியை வசூலிக்கும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. எனவே, தொழி லாளர்களின் உரிமை, அவர்களின் நலன், தேசத்தின் நலன் பாது காக்கப்பட வேண்டும் என்றால் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்க அலு வலகத்தை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவுரவத் தலைவர் வே. மன்னார் திறந்து வைத்தார், கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் கே.சீனிவாசன், தர்மபுரி வட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்தி ரன், பொறியாளர் சங்க நிர்வாகி நடராஜன், மண்டல செயலாளர் ஆர். சிவராஜ், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சம்பத், சிபிஎம் மாவட்டச்செயலாளர் சிவக்கு மார், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி, உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வட்ட பொருளாளர் வி. எம். வெங்கடேசன் நன்றி கூறினார்.