சென்னை, அக்.9- மூளைச் சாவு அடைந்த 30 வயது திருச்சி இளைஞரின் இதயம் சென்னை சேர்ந்த 22 வயது இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்ச ரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த இளை ஞருக்கு கார்டியோமயோபதி என்னும் இதய தசை கடினமாதல் நோய் மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டும் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. இந்த நிலையில் அவர் உறுப்பு தானம் பெறுவதற்காக பதிவு செய்து கடந்த மே மாதம் முதல் காத்திருந்தார். திருச்சியில் மூளைச்சாவு அடைந்த 30 வயது இளைஞரின் இதயம் கிடைத்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னை கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதய அறுவை சிகிச்சை மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாக இதனை செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிக்கல் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனை யில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.