ஆவடி, ஆக. 18-
ஆவடி அடுத்த பட்டா பிராம், கரிமேடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் உமா தேவி (33). இவர் குன்றத்தூ ரில் உள்ள ஒரு வீட்டில் சமை யல் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வீட்டு வேலைக்கு சென்ற உமா தேவி சமையல் வேலையை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப் பட்டார். இவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச் சாலை நெமிலிச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது, மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த ஆவடி போக்கு வரத்து பிரிவு காவல் துறை யினர் உமாதேவி உடலைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, இரண்டு லாரி ஓட்டுநர்கள் பாதுஷா, ஜாகிர் உசேன் ஆகியோரை கைது செய்தனர்.