கடலூர், டிச.25- அபுதாபியில் நடைபெற்ற பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்ற கடலூர் மாணவனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச 5 வது ஜூனியர் வேர்ல்ட் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி அபுதாபியில் கடந்த டிசம்பர் 18 முதல் 22 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 2 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 8 பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்ட கடலூர் பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் நித்தீஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார். தாயகம் திரும்பிய நித்தீஸ்வரனுக்கு கடலூர் பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பயிற்சியாளர் செல்வகுமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.