சிதம்பரம், ஏப். 16- மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி சிஐடியு சார்பில் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலூர், சேலம், கன்னியாகுமரி, சென்னை, கோவை, தென்காசி, வேலூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் இருந்து நடைபயணம் மூலம் மக்களை சந்தித்து 30ஆம் தேதி திருச்சியில் 50,000 பேர் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கடலூர் மண்டலத்தின் சார்பில் கடலூர், திருவாரூர், நாகை, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பழனிவேல் வர வேற்றார். சிஐடியு மாநில துணைப் பொது செயலாளர் திருசெல்வம், பயண குழு கன்வினர் ஜெயபால் ஆகியோர் நடை பயண நோக்கங்கள் குறித்து பேசினர். இதில் தஞ்சை மாவட்ட தலைவர் கண்ணன், மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் மாரியப்பன், நாகை மாவட்டச் செயலாளர் தங்கமணி, திருவாரூர் மாவட்டத் தலைவர் அனிபா, மயிலாடு துறை மாவட்டத் தலைவர் ரவீந்திரன், நாகை மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.