வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அக்சீலியம் பெண்கள் கல்லூரியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் நடைப்பெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், மாநகர துணை மேயர் எம்.சுனில் குமார், திட்ட அலுவலர் வி.கோமதி, காட்பாடி 1ஆவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, அக்சீலியம் கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.