districts

img

கும்பல் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்

சென்னை, டிச. 22- கும்பல் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபானமை மக்கள் நலக் குழுவின் வடசென்னை மாவட்ட 4ஆவது மாநாடு கொடுங்கையூரில் சகோதரர் ஷாஜகான் நினைவரங்கில் வியாழனன்று (டிச. 21) நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எம்.பி.முகமது நாசர் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.தமீம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஆவணப்பட இயக்குநர் கொம்பை அன்வர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.அமல வெற்றி ராஜன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைச்செயலாளர் ஒய்.இஸ்மாயில், திருப்போரூர் பள்ளிவாசல் இமாம் எம்.எஸ்.முகமது சலீம், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் சி.அரி வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பி னர் என்.ஜபருல்லாகான் நன்றி கூறினார். தீர்மானங்கள் பாலஸ்தீனத்தின் மீதான போரை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும், ஒன்றுபட்ட காஷ்மீருக்கு மீண்டும் 370 சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், ஐ.நா சிறுபான்மை மக்கள் உரிமைகள் பிர கடனத்தை (டிசம்பர் 18-1992) அமல்படுத்த வேண்டும்.  தலித் கிறிஸ்தவ மக்களை எஸ்.சி.அட்டவணை பட்டியலில் சேர்க்க வேண்டும். முத்தலாக் கிரிமினல் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்பனை செய்யக் கூடாது, தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், கும்பல் படு கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக விசாரணையின்றி சிறையில் வாடும் இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு சிறுபான்மை துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், பட்டா இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட அனுமதிக்க வேண்டும், கல்லறைத் தோட்டங்களுக்கு பொருத்தமான இடங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக எம்.பி.முகமது நாசர், செயலாளராக கே.எஸ்.கார்த்தீஷ்குமார், பொருளாளராக எஸ்.அமல வெற்றி ராஜன் உள்ளிட்ட 33 பேர் தேர்வு செய்யப்பட்ட னர்.