districts

img

சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட பெண் அரசு வேலைகேட்டு ஆட்சியரிடம் மனு

கடலூர், மார்ச் 16- சுயமரியாதை திருமணம்  செய்து கொண்ட பெண் அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் குறை கேட்பு கூட்டம் நடை பெற்றது. அப்போது அங்கு வந்த பெண் ஒரு வர், தனக்கு அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கிருந்து பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்று விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் செம்மண்ட லத்தை சேர்ந்த வேலு மனைவி சம்மர்த்தியவதி (33) என்பதும், இவர் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளதும் தெரிய வந்தது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகங்களில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, நேர்காணலில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஆனால், பணி ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இதையடுத்து, தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்கப்படவில்லை. இத னால் அவர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார்.