districts

img

நாங்குநேரியில் பட்டியலின மாணவர், சாதி ஆதிக்கம் கொண்ட சக மாணவர்களால் வெட்டப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாங்குநேரியில் பட்டியலின மாணவர், சாதி ஆதிக்கம் கொண்ட சக மாணவர்களால் வெட்டப்பட்டதை கண்டித்து திங்களன்று (ஆக.14) வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி பொருளாளர் டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  விசிக மத்திய சென்னை மாவட்ட செயலாளர்  அப்புன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி., தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மத்தியசென்னை மாவட்டச்செயலாளர் மதியழகன், நிர்வாகிகள் பி.சுந்தரம், புகழேந்தி, செ.விக்னேஷ், வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா உள்ளிட்டோர் பேசினர்.