districts

img

சூப்பர்பில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போராட்டம்

திருவள்ளூர், ஜன 12- இருளிப்பட்டு சூப்பர் பில் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, தொழி லாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். பொன்னேரி அருகில் உள்ள இருளிப்பட்டில்   சூப்பர் பில் என்ற தனியார் நிறுவனம் இயங்கி  வரு கிறது. இதில் 180 தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வருகின்றனர். இதில் மீன்பிடி வலைகளுக்கான நைலான் கயிறு களை தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில்  பணியாற்றும் தொழி லாளர்களின்  கோரிக்கைகளை நீண்ட காலமாக நிறைவேற்றதாத நிலை இருந்தது, இந்நிலையில் அவர்கள்   சிஐடியு  சங்கத்தில் இணைந்தனர். சிஐடியு - வில் இணைந்த ஒரே காரணத்திற்காக தொழிலாளரகளை பழி வாங்கும் நோக்கத்தோடு,  கடந்த ஆகஸ்ட் 15 அன்று திடீரென  இரண்டு தொழிலாளர்கைளை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது. அதில் ஒருவரை பாண்டிச்சேரிக்கும், மற்றொருவரை நாகர்கோவிலுக்கும் இடமாற்றம் செய்தது.  நாங்கள் இங்கேயே பணியாற்றுகிறோம் என நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் கடிதம் கொடுத்துபோதிலும்  இதை யெல்லாம் பொருட்படுத்தாத நிர்வாகம், சிஐடியு சங்கத்திலிருந்து வெளியே வந்தால் தான் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என்று நிபந்தனை விதிக்கிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை கூட நிர்வாகம் வழங்கவில்லை. ரசாயன பொருட்களை கையாளக்கூடிய தொழிற்சாலையில் அதற்கான பாது காப்பு ஏற்பாடுகள் இல்லை. ரசாயன பொருட்களின் கழிவுகள் பூமிக்கு வெளியே கொட்டப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் தொழிலாளர்கள் கேட்டால் உடனடியாக அவர்களை வெளியே நிறுத்துவது போன்ற சட்ட விரோதமாக நிர்வாகம் நடந்து கொள்கிறது.  நிர்வாகத்தின் இந்த தொழிலாளர் விரோத போக்கை சிஐடியு தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளியன்று (ஜன 12), முதல் சூப்பர்பில் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கி யுள்ளனர். இதற்கு  பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு  மாநில துணைத்தலைவர் கே.விஜயன்,  விவசாய தொழிலாளர் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர்,  பொது தொழிலாளர் சங்கத்தின் சோழ வரம் வட்டார செயலாளர் நடராஜன்,  ஸ்டார் டிரைவ் செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் இதில் பேசினர்.