districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் நவீன வசதியுடன்  15 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்

சென்னை,மே 10- நவீன வசதியுடன் சென் னையில் உள்ள 15 ரயில் நிலையங்கள் மேம்படுத் தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலை யங்கள் புதுப்பித்து மேம் படுத்தப்பட உள்ளன. இந்த 90 ரயில் நிலையங்களை கண்டறிந்து அங்கு உள்கட்ட மைப்பு மேம்பாட்டு பணி களை மேற்கொள்ளுவ தற்கான ஒப்பந்தங்களை ஆலோசகர்களுக்கு வழங்கி யுள்ளது. இந்த ஒப்பந்தங்க ளின் விலை ரூ.11.22 கோடி யாகும்.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் கூறியதாவது:-  ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு டெண்டர் விடுவதற்காக ரூ.881.42 கோடி நிதி ஒதுக் கீட்டுக்காக தெற்கு ரயில்வே காத்திருக்கிறது. தெற்கு ரயில்வேயின் 6 மண்டலங்களின் கீழ் வரும் 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.  சென்னை கோட்டம்  சென்னை கோட்டத்தில், கிண்டி, பரங்கிமலை, கடற் கரை, பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்ப லம், திருத்தணி, ஜோலார் பேட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கூடு வாஞ்சேரி, செங்கல்பட்டு  ஆகிய 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறு கின்றன. பிளாட்பாரங்களின் உயரத்தை அதிகரிப்பது, பயணிகள் நடந்து செல்லும் நடை மேம்பாலங்களை அக லப்படுத்துதல், குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் 2-வது நுழைவுவாயலை ஏற்படுத்துதல், ரயில் நிலை யங்களின் கட்டமைப்பின் உட்புறங்களை மேம்படுத்து தல், கழிப்பறைகளை புதுப் பித்தல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

2 பேர் செல்லக்கூடிய லிப்ட்: சென்னையில் அறிமுகம் 

சென்னை. மே 10- சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல் படும் நிபாவ் ஹோம் லிஃப்ட்ஸ் நிறுவனம் சென் னையில் தனது நான்கா வது உற்பத்திப் பிரிவைத் திறப்பதன் மூலம் அதன்  செயல்பாடுகளை விரிவு படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற் குள் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் 4,500 ஊழியர் களை பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  விமல் ஆர். பாபு” விரிவாக் கப்பட்ட உற்பத்திபிரிவில் இரண்டு வகையான வீட்டு லிஃப்ட்டுகள் உற்பத்தி செய்யப்படும் என்றார். தற்போதைய 1,500 ஊழி யர்களின் பலத்துடன், நாங்கள் மூன்று ஷிப்டுக ளில் மாதத்திற்கு 600  லிஃப்ட்களை தயாரிப் போம்” என்றும் அவர் கூறினார். நிபாவ் ஹோம்ஸ் 2023 நிதியாண்டில் 2,400 யூனிட்களை விற்று ₹400  கோடி விற்றுமுதல் ஈட்டி யது. இதில் ஏற்றுமதி 20விழுக்காடு ஆகும். 24ஆம் நிதியாண்டில் ₹1,000 கோடி விற்பனை வருவாயை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய லிப்ட்களை இந்நிறுவ னம் புதிதாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் விலை விலை ₹9.9 லட்சம் ஆகும். 

கோடையில் பரவும் சின்னம்மை

சென்னை,மே 10- வேரிசல்லா  என்ற வைரஸ் மூலம் பரவக் கூடி யது சின்னம்மை நோயாகும்.  இது கோடை காலத்தில் அதிகமாக பரவும்  என்பது அறிவியல் பூர்வமான உண்மை.  அசுத்தமான சூழலுக்கு  நடுவே வசிப்பவர்களுக் கும், நோய் எதிர்ப்பாற்றல்  குறைவாக இருப்பவர்க ளுக்கும் வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக்கூடும். அவர்களது எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவலாம். அதை சரி வர கவனிக்காமல் விட்டாலோ அல்லது சிகிச்சை பெறாவிட்டாலோ நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  சின்னம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளது என்ற போதிலும், அத்தகைய தடுப்பு மருந்துகள் மூல மாக இந்த நோயை முழு மையாகத் தடுக்க முடி யாது என்கின்றனர் மருத்து வர்கள்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மவுண்ட் பார்க் பள்ளி 99.7 விழுக்காடு தேர்ச்சி

கள்ளக்குறிச்சி, மே 10- 12ஆம் வகுப்பு தேர்வில் தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி 99.7 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருக்கும் மவுண்ட் பார்க் பள்ளி மாண வர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 424 மாண வர்கள் தேர்வு எழுதியதில் 422 பேர் (99.7 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி அபிநயா 591 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 96, இயற்பியல் மற்றும் உயிரியல் 99, வேதி யியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மதுபாலா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 93, இயற்பியல், உயிரி யல், கணிதம் ஆகிய பாடங்களில் 99, வேதி யியல் 100 என மதிப்பெண்கள்  பெற்றுள்ளார். மாணவர் மாதேஸ்வரன் 586 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 90, கணிதம் 99, இயற்பியல், வேதியியல், உயிரி யல் பாடங்களில் 100க்கு 100 மதிபெண்கள் பெற்றுள்ளார். பல்வேறு பாடப்பிரிவு களில் 37 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதேபோல் மவுண்ட்  பார்க் ஸ்பெஷல் அகடமியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று  பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தாளாளர் மணி மாறன் பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, ஸ்பெஷல் அக டாமி முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

விழுப்புரம், மே 10- விழுப்புரம் மாவட் டம், மாம்பழப்பட்டு அருகே காங்கேயனூர் பகுதி யைச் சேர்ந்தவர் விவசாயி சசி குமார் (50). இவர் அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் பயி ருக்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்கி னார். அப்போது எதிர் பாராத விதமாகமின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். இது குறித்து அந்த வழி யாக சென்றவர்கள் காணை காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விவ சாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, மே 10- தேன்கனிக்கோட்டை அருகே புதிதாக கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை பஞ்சாட்சிபுரம் மற்றும் கோபனபள்ளி பகுதியில் புதிதாக தனி யார் கல்குவாரிகள் தொடங்கப்படுவது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில மக்கள் கருத்து கேட்புக் கூட்டம்  நாகொண்டப்பள்ளியில் நடைபெற்றது. ஓசூர் சாராட்சியர் சரண்யா தலைமை தாங்கி னார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில், கொரட்டகிரி, தண்டரை, அடவி சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு அனுமதி பெறாத கல்குவாரிகள் உள்ளிட்ட 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் மாச டைந்து, ஆடுமாடுகள் உயிரிழக்கும் நிலை உள்ளது. குவாரிகளில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகின்றன. குவாரி களுக்கு சரமாரியாக வந்து செல்லும் டிப்பர் வாகனங்களால் சாலைகள் பழு தடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி வழங்குவதை ஏற்கமுடியாது. குவாரி அமைத்தால் அதை எதிர்த்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் கூறினார். பின்னர் இதுகுறித்து ஓசூர் சாராட்சியரிடம் மனு அளித்தனர். மக்களின் கருத்துகளை கேட்டறிந்த சாராட்சியர் சரண்யா, உங்கள் கருத்துக்கள் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் கொள்ளை

விழுப்புரம், மே 10- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை (மே 9) இரவு கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார். மறுநாள் (மே 10) கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்ததை பேருந்து நிலையத்திலுள்ள ஆட்டோ ஓட்டுநர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். அன்பழகன் வந்து பார்த்த போது, பெட்டியில் இருந்த ரூ. 45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அன்பழகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி, மே 10 - தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதனன்று காலை ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவிய காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்த மான் கடல்பகுதியில் மோக்கா புயலாக புதனன்று வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வியாழன் வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன்பிறகு வடக்கு -வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதனன்று காலை ஏற்றப்பட்டது.

உரிமம் இல்லாமல் கழிவுநீர் வாகனம்: அதிகாரி எச்சரிக்கை

விழுப்புரம், மே 10- விழுப்புரம் நகரில் நகராட்சி உரிமம் இன்றி இயக்கப்படும் கழிவுநீர் வாக னங்கள் பறிமுதல் செய்யப் படும் என்று நகராட்சி ஆணை யர் சுரேந்திரஷா எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-  வாகனங்களின் மூலம் எடுத்துச்செல்லும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலை யத்தில் செலுத்தா மல், பொதுமக்களுக்கு சுகா தாரகேடு விளைவிக்கும் வகையில் சாலையோரங்க ளில் கொட்டினால் முதல் முறை ரூ.25 ஆயிரம், 2ஆவது முறை ரூ.50 ஆயிரம் என நகராட்சியின் மூலம் அபராத கட்டணம் விதிக்கப்படும். 3ஆவது முறை வாகனம் பறிமுதல் செய்யப்படும். எனவே விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தனியார் வாக னங்களின் மூலம் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமை யாளர்கள் தகுந்த ஆவ ணங்களுடன் ரூ.2 ஆயிரத்தை நகராட்சி அலு வலகத்தில் செலுத்தி விண்ணப்பித்து உரிமத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன் அறிவிப்பின்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன உரிமையாளர்கள் மீது நீதிமன்றம் மூலமாக வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பொது மக்கள், தங்கள் இல்லங்க ளில் உள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியில் உரிமம் பெற்ற கழிவு நீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.