திருவண்ணாமலை, டிச.4- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, அரியாகுஞ்சூர் ஊராட்சி மன்றம், சின்னகல்தாம்பாடி கிராம பிள்ளையார் கோவில் தெருவில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் மக்கள் பட்டா இல்லாமல் வாழ்ந்து வரு கின்றனர். இந்த மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கம் வட்டாட்சியர் அலுவ லகம் நோக்கி ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எ.இலட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினர் சிஎம்.பிரகாஷ் தாலுக்கா செயலாளர் பி.கணபதி, இடை கமிட்டி உறுப்பினர்கள் கண்ணன்,சரவணன், ஆறுமுகம்,ஏழுமலை,சதீஷ், காமாட்சி ஆகியோர் பங்கேற்றனர்.