districts

img

தொழிற்சங்க தலைவரை சாதியை சொல்லி இழிவுபடுத்திய தனியார் நிறுவன மேலாளர்

திருவள்ளூர், நவ 16- இருளிப்பட்டில் தொழிற்சங்க தலைவரை சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசிய, தொழிற்சாலை மேலாளர், மனித வள அதிகாரி ஆகியோரை நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமையன்று (நவ 16), சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி அரு கில் இருளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள் ளது சூப்பர் பீல் தொழிற்சாலை.  இங்கு  பணியாற்றும் சிஐடியு  சங்கத் தலைவர்  பன்னீர்செல்வம் தலித் என்பதால், அவரை தொழிற்சாலையின்  மேலாளர் கருப்புசாமி மற்றும் மனிதவள அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் சாதிப் பெயரைச் சொல்லி இழி வாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அந்த இரண்டு அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சோழ வரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும் இருவரையும் காவல்துறை யினர் கைது செய்யவில்லை. தொழிற்சாலை யில் சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி, தொழில் அமைதியை சீர்குலைக்கும் இரு வரைவும் உடனடியாக கைது செய்யக்கோரி இருளிப்பட்டில் ஆலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் தலைமை தாங்கினார்.  இதில் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார்,  மாநில துணை த்தலைவர் கே.விஜயன்,  திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் என். நித்தியானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.