திருவண்ணாமலை மாவட்டம், அரியாகுஞ்சூர் கிராமத்திற்கு புதிய சாலை அமக்க வேண்டும், விண்ணவனூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செயலாளர் எ.இலட்சுமணன், நிர்வாகிகள் சிஎம்.பிரகாஷ், ஆர்.காமராஜ், எம்.கண்ணன், எம்.சரவணன் ஆகியோர் மனு அளித்தனர்.