districts

img

போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க கோரி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்

போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க கோரி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. இதனையொட்டி சனிக்கிழமையன்று (மார்ச் 25) மயிலாப்பூர் பகுதி தலைவர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு தொடங்கி வைத்தார். ‘மாவீரன் பகத்சிங் நினைவு தின கோப்பை-2023’ கிரிக்கெட் போட்டியை, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.