காஞ்சிபுரம், செப்.9- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமத்தில் திங்களன்று திடீரென மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி யில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் குவியத் தொடங்கினர். இந்நிலையில் தரையிறங் கிய ஹெலிகாப்டர், ராணுவ வீரர்கள் பயிற்சி மேற் கொள்ள பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என தெரிய வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரை யிறக்கப்பட்டதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக் கின்றன. இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயிற்சி மேற் கொள்ள வந்த ராணுவ ஹெலிகாப்டர் தர இறங்கி யுள்ளது. தற்பொழுது ஹெலிகாப்டரை சரி செய்யும் பணிகள் நடை பெற்ற வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.