திருவள்ளூர், ஜூன் 24-
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் முட் புதர் ஒன்றில் ஆண் சடலம் ஒன்று உள்ளதாக அப்பகுதி வாசிகள் அளித்த தகவலை தொடர்ந்து, நிகழ்வு இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் அங்கு சடலம் ஒன்றை கைப்பற்றி னர். இறந்து கிடந்த நபரின் அருகில் மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் மர்மமான முறையில் இருந்து கிடந்த நபர் அருகி லுள்ள செஞ்சி அம்மன் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பதும் கூலி தொழி லாளியான அவருக்கு மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகள் உள்ளதும் தெரிய வந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர் பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்பத் தகராறு காரண மாக மதுவில் விஷம் கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் திட்டமிட்டு அவரை அழைத்து வந்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய் தனரா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.