districts

சென்னை முக்கிய செய்திகள்

கோயில் நிலத்தை சொந்தம்  கொண்டாடுவதைத் தடுத்திடுக  குத்தகை விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர், ஜன.31- கோயில் நிலத்திற்குத் தனிநபர் சொந்தம் கொண்டாடு வதை பொன்னேரி கோட்டாட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் சர்வே எண்கள் 779/1,3, 780 மற்றும் 781 ஆகிய இடத்தில் 41 குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தை போலியாக அறக்கட்டளை நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவர் தனக்கு சொந்தமானது என வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறிய நிறுவனங்களுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்புகள்  ஜி ஸ்கொயர் அறிவிப்பு

சென்னை, ஜன.31- சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இணைந்து, வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. இதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஜி ஸ்கொயர் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழை கிறது. அதற்காக ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த முதலீட்டை கொண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள சிறிய அளவிலான பில்டர்களுடன் கூட்டு சேர விரும்புகிறது. இதன் மூலம் சிறிய கட்டுமான நிறுவனங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலத்தில் தங்க ளது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வில்லா மற்றும் அடுக்குமாடி வீடுகளை கட்டி கொள்ள வாய்ப்பு தருகிறது. அந்த வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பிரிவை, நிறுவனத்தின் தேசிய விற்பனை தலைவர் சிவகுமார் பெத்தையன், தலைமை இயக்க அதிகாரி ஜூனைத்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி

அம்பத்தூர், ஜன.31- ஆவடியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில், தம்பதியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். ஆவடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஹெலன் (40). இவர் பெண்களுக்கான முக அலங்காரம் நிலையம் நடத்தி வரு கிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு இவ ருக்கு ஆவடி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் அறிமுகமாகி யுள்ளார். அப்போது அவர் தானும், தனது கணவர் ஜெகதீஷ்வராவ்வும்  சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி வருவதாகவும், இதில் நீங்கள் சேர்ந்து சீட்டு கட்டி வந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி யுள்ளார். இதை நம்பிய ஹெலன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செல்வி, அவரது கணவர் ஜெகதீஷ்வராவிடம் ஏலச்சீட்டுக்கு ரொக்கமாகவும், வங்கி கணக்கு வாயிலாகவும் மொத்தம் 11 மாதங்கள் ரூ.93,785/- பணத்தை கொடுத்துள்ளார். ஹெலன் ஏலச்சீட்டு எடுத்த பிறகும், தம்பதியினர் பணத்தை கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.  இது குறித்து ஹெலன் உள்ளிட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மை யில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தம்பதியினர் 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஹெலன் உள்பட 20 நபர்க ளிடம் ரூ.32 லட்சம் வரை ஏலச் சீட்டுக்கு பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி யது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை, நங்கநல்லூரில் தலை முறைவாக இருந்த செல்வி (36), அவரது கணவர் ஜெகதீஷ்வராவ் (42) ஆகி யோரை வியாழக்கிழமை காவல் துறையி னர் கைது செய்து, அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை, ஜன. 31- சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லா வரம் பாரதிநகர் 4வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் தன லட்சுமி (43). இவர் சென்னை கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்து வந்தார். கருத்து வேறுப்பாட்டின் காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனலட்சுமி, அங்கு தனியாக வசித்து வந்தார். தனியாக வசித்து வந்த தினால் தனலட்சுமி மிகுந்த வேதனையுடனும்,மன அழுத்ததுடனும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வீட்டில் இருந்த வாஷிங்மிஷின்,ப்ரிட்ஜ்,ஏசி உள்ளிட்ட இயந்திரங்களும் தீப் பிடித்து எரிந்து, பலத்த சத்ததுடன் வெடித்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீ ஸார், கதவை உடைத்து உள்ளே சென்ற னர். அப்போது அங்கு தனலட்சுமி தீயில் உடல் கருகி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீஸார், தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  வாலிபருக்கு ஆயுள்

கடலூர், ஜன.31- கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன் (40) கூலி தொழிலாளி. அவர் திருமணமாகி தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டுக்கு வந்த 13  வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறு மிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அப்போது அப்போது அந்த சிறுமி கர்ப்ப மாக இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த 2019ம் ஆண்டு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்த னர். புகாரின் பேரில் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார் மணி கண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவ ருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.