districts

img

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் சுதேசி பஞ்சாலை எதிரில் மாபெரும் தர்ணா போராட்டம் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கவுரவத் தலைவர் பிரேமதாசன், நிர்வாகிகள் கீதா, ரவிச்சந்திரன், முனுசாமி, ஆனந்த கணபதி, செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட  தன்னாட்சி நிறுவன ஊழியர்கள் திரளானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.