ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி, சென்னையில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பெருந்திரள் அமர்வு நடைபெற உள்ளது. அதன் விளக்கக் கூட்டம் சிஐடியு, ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் செங்குன்றம் காவாங்கரையில் மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் எஸ்.கே.மகேந்திரன், சு.லெனின்சுந்தர், ஏ.நடராஜன், எம்.மூர்த்தி, வி.சரவணன் (சிஐடியு), ஆர்.துரைசாமி, எம்.எஸ்.மூர்த்தி, எஸ்.வெங்கடேஷ், து.திருநாவுக்கரசு, ஏ.அருள் (ஏஐடியுசி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.