வேலூர், மே 22-
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் திங்களன்று (மே22) நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, பேரணா ம்பட்டை அடுத்த, கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முய ன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். . இது குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில், “எனது மனைவி சகுந்தலா (32 ), மகன் புகழ் ஆகி யோர் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என்றார்.