ஜோலார்பேட்டை,நவ.29- திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (42) இவரது மகள் ஜெயமித்ரா (16). இவர் அதே பகுதி யில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அவரது சகோதரி லீனா (13) அதே பகுதியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தம்பி மெதுஷ் (12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ெஜயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும் போது அதை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது. இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக் கொடுக்க தொடங்கினர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாதஸ்வ ரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளி கள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு சிறப்பாக வாசித்தார். கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சி யில் பங்கேற்றார். தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருவதால் கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் முயற்சியில் அப்பள்ளி யின் மாணவி ஜெயமித்ரா சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.