சென்னை, ஜூலை 3- அதிக முறை பயணம் செய்த பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப் பட்டது. மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணிக்கும் பயணி களுக்கு ஒவ்வொரு மாத மும் ரூ.1 லட்சம் மதிப்பி லான பரிசு பொருள் வழங்கப்படும். அதன்படி, மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோ உடன் இணைந்து பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரயில் நிலை யத்தில் சனிக் கிழமையன்று நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) பிரசன்ன குமார் ஆச்சார்யா பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.