districts

img

மீன்வளப் பல்கலை.யில் மேலும் 15 விழுக்காடு இடஒதுக்கீடு

சென்னை, டிச.31 - தமிழ்நாடு ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு கூடுதலாக 15 விழுக்காடு கூடுதலாக இட  ஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் 120 லிருந்து 160 ஆக உயர்த்தி வழங்க தமி ழக அரசு அரசாணை பிறப் பித்துள்ளது. நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ்  செயல்படும் மூன்று உறுப்பு  கல்லூரிகளை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன் வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன் னேரி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு ஆகிய கல்லூரிகளில் உள்ள 120 இடங்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையின் போது, மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 5  இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள அரசா ணையின் படி ஒதுக்கப்பட்டு வருகிறது. கூடுதல்...

எனவே, அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது, கூடுதலாக 15 விழுக்காடு மிகை இடங்கள் மீனவ குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இள நிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்கை யில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதனடிப் படையில் மீன்வள இளநிலை அறிவியல் பட்ட படிப்பிற்கு சேர விரும்பும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர் கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படு வார்கள். மேலும் இம் மாணவர்களின் கல்விக் கட்ட ணம் மற்றும் விடுதி கட்டணம் போன்ற அனைத்து கட்டண ங்களையும் மாணவர்களே செலுத்த வேண்டும். அதனுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 10 இடங்கள், அயல் நாட்டவர்க ளின் 3 இடங்கள், காஷ்மீரில் குடியேறியோர் மற்றும் காஷ்மீர் பண்டிட், காஷ்மீர் இந்து குடும்பங்களுக்கான ஒரு இடம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவைச் சார்ந்த மாணவர்களுக்கு இரண்டு இடங்கள் ஆகிய அனைத்து இட ஒதுக்கீடு களையும் இணைத்து தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவி யல் மாணவர் சேர்க்கைக் கான மொத்த இடங்கள் 2021  - 22 கல்வியாண்டு முதல் 160 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.