மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய தில்லி காவல்துறையினரை கண்டித்தும், அமைச்சர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், செயலாளர் எஸ்.அறிவழகன், பொருளாளர் டி.தேவநாதன், மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டத் தலைவர் கே.தமிழ்ச்செல்வி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.