கடலூர் கடற்கரை சாலையில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையம் இடிக்கப்பட்டு, ரூ.4 கோடியே 43 லட்சம் மதிப்பில் புதியதாக நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த தீயணைப்பு,மீட்பு பணிகள் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.