districts

img

திருப்பதியில் லட்டு விநியோக கவுண்டரில் தீ விபத்து

திருப்பதியில் லட்டு விநியோக கவுண்டரில்  தீ விபத்து திருவள்ளூர், ஜன. 13- திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு விநியோக கவுண்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனிடையே கோவில் பிரசாதம் வழங்கும் லட்டு விநியோக வளாகத்தில் உள்ள 47ம் எண், கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த தும், லட்டு வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்து தேவஸ்தான மின்சார துறை அதிகாரிகள் மின்விநியோகத்தை நிறுத்தினர். யு.பி.எஸ்.சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.