districts

img

கூலி கேட்ட மாற்றுத் திறனாளி பற்களை பிடுங்கி சூடு வைத்த கொடூரம்

சிதம்பரம், ஜூன் 14-

   கூலி கேட்ட மாற்றுத் திறனாளி பல்லை பிடுங்கி இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த கொடூரம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது.

   சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வசிப்பவர் ராஜேஷ் கண்ணன். இவரது மனைவி கண்ணகி. இவர்களின் மகன் சுகன் (20). இவர் 70 விழுக்காடு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவரை சிதம்பரம் சுப்பிரமணிய தெருவை சேர்ந்த மணி, அண்ணாமலை நகர் மண் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் வேலைக்கு அழைத்துச் சென்று கூலி கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர்.

    பின்னர் சுதன் வீட்டிற்குச் செல்வதாக கூறிய போது, போக விடாமல் அவரது முதுகு, கால் பாதம், நாக்கு உள்ளிட்ட பல இடங்களில் ‘அயர்ன் பாக்ஸ்’ மூலம் சூடு வைத்துள்ளனர். மேலும் அவரது 6 பல்லை புடுங்கியுள்ளனர். இதன்பிறகு, அவர் வெளியே செல்லாத வகையில் சிதம்பரம் மன்னார்குடி தெருவில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்துள்ளனர்.  

   இந்நிலையில், சுகன் புதன்கிழமை (ஜூன் 14) அங்கிருந்து தப்பித்து வந்து உறவினர்களிடம் நடந்தவற்றை கூறி யுள்ளார். இதையடுத்து, அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   இதுகுறித்து சிதம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தகவல் அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நகரத் தலைவர் அமுதா மருத்துவமனைக்கு சென்று சுகனுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம்  வலியுறுத்தினார்.