நலவாரிய குளறுபடிகளை களைந்திடக் கோரியும், நலவாரிய பதிவு மற்றும் கேட்பு மனுக்கள் தொழிலாளர்கள் நேரடியாக கொடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டியும் முறைசாரா தொழிலாளர்கள் (சிஐடியு) மாநிலம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூரில் ஏ.குப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் தலைவர் கே .காங்கேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாரி, பொருளாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட, மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.