மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், கலவரத்திற்கு காரணமான மாநில, ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டக் குழு சார்பாக படாளம் கூட்டுச்சாலையில் வெள்ளியன்று (ஜூலை 21) வட்டக் குழு உறுப்பினர் கே.வனிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் உள்ளிட்ட பலர் பேசினர்.