districts

img

வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்குக

சென்னை, செப்.1 - வீடற்ற மாற்றுதிறனாளிகள் அனை வருக்கும் வீடு கொடுப்பதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் வலியுறுத்தி உள்ளார். சங்கத்தின் தாம்பரம் பகுதி ஆண்டு பேரவை அண்மையில் நடைபெற்றது. பகுதி தலைவர் ஜெ.மைதிலி தலைமையில் நடை பெற்ற இந்த பேரவையை தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் துவக்கி வைத்தார். பகுதிச் செயலாளர் அ.கிருஷ்ணன் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட துணை தலைவர்கள் என்.சாந்தி, வி.மாயவன், எம்.சரஸ்வதி எம்.சி., நலம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் தலைவர் அனுராதா, வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தா.கிருஷ்ணா, தொழிற்சங்கத் தலைவர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பேசினர். பேரவையை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலை வர் தோ.வில்சன் பேசினார். முத்துலட்சுமி நன்றி கூறினார். பகுதி தலைவராக ஜெ.மைதிலி, செய லாளராக அ.கிருஷ்ணன், பொருளாளராக எம்.தீனதயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.