districts

img

மாற்றம் காண மக்களை திரட்டும் பிரச்சார இயக்கம்

தொழிலாளி வர்க்கம் இன்றைய சூழலில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகிறது. வேலையிழந்து, வருமானம் இன்றி, விலைவாசி உயர்வால் அல்லப்  பட்டு, சமூக ஒடுக்குமுறை எனும் சாக்கடையில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறி கிடக்கிறது. தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி, பக்குவப்படுத்தி அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டியது அவசியமல்லவா?   நவீன காலத்திற்கேற்ப அணுகு முறைகளை மாற்றி, மக்களை திரட்டாமல் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, வெறுப்பு அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஆட்சியாளர்களின் கருணையால்தான் எல்லாம் நடக்கிறது என்று அரசும், ஆளும் வர்க்கமும் பொதுப்புத்தியில் புகுத்தி இருப்பதை தகர்த்தெறிய வேண்டும். வெகுமக்கள் மக்க ளின் பொதுப்புத்தியில் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் நிரம்பி இருக்கும். அதை மாற்றி அமைப்பதே நமது முதன்மையான பணி என்பார் கிராம்ஷி. அத்தகைய பணியை செய்ய வெகுமக்களுக் கும் நமக்குமான உறவு உயி ரோட்டமாக இருக்கவேண்டும். இந்த உயிரோட்டமான உறவை ஏற்படுத்தாமல் நமது இயக்கத்தை பரந்துபட்ட மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது.

கொல்கத்தா பிளீனம்
2015 ஆம் ஆண்டு கொல்கத்தா வில் நடைபெற்ற நமது கட்சியின் பிளீனம், கட்சியை வெகுமக்கள் புரட்சி கட்சியாக மாற்றிட கடந்த கால அனுபவத்தில் இருந்து பரி சீலனை செய்து இரண்டு முடிவு களை எடுத்தது. நமது வேலை பாணியில் மாற்றம் வேண்டும், வெகு மக்கள் பாதையில் செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகள் எப்போது மக்களோடு உயிரோட்டமாக இருக்க வேண்டும். தண்ணீரில் மட்டுமே மீன்கள் உயிர்வாழ முடி யுமோ, அப்படி கம்யூனிஸ்டுகள் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் தனி மைபட்டு விடுவோம். எனவேதான் அதற்கேற்ற வகையில் நமது வேலை முறையில் மாற்றத்தை கொண்டு வந்து, மக்களோடு இரண்டற கலந்து செயல்பட வேண்டும் என கொல்கத்தா பிளீனம் வழிகாட்டியது. தற்போது நடந்து முடிந்த நமது 23வது அகில இந்திய மாநாடும் மீண்டும் மீண்டும் இதே விஷயங்களை அழுத்தமாக வலியுறுத்துகிறது.

எத்தனை அனுபவங்கள்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுதேர்தலுக்கு முன் ஆளும் பாஜக அரசு, கேரள அரசின் மீதும் குறிப்பாக பினராய் விஜயன் மீதும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. சபரிமலை விவகாரம், தங்கம் கடத்தல், கொடி யேறி பாலகிருஷ்ணன் மகன் பிரச்சனை இப்படி அடுக்கடுக்கான பொய் பிரச்சாரங்களை தொய்வின்றி செய்தது. இதற்காக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை என ஒட்டுமொத்த அதிகாரிகளும் கள மிறக்கப்பட்டன. இதற்கு இசை வாக இந்திய முதலாளித்துவ ஊட கங்களும் பொய் பிரச்சாரங்களை ஊதித்தள்ளியது. அதன் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 இடங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது. கேரளா முழுவதும் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் வர்க்க, வெகுமக்கள் அமைப்பின் நிர்வாகிகளும். நமது கருத்தியலை வலுவாக கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டனர். கட்சி யின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் முதல் கட்சி உறுப்பினர் வரை நேரடியாக மக்களிடம் செல்வது, உரையாடுவது, உண்மைகளை விளக்குவது என தீவிர இயக்கத்தை நடத்தினர். அந்த இயக்கம் மக்க ளின் பொதுப்புத்தியை மாற்றியது. வரலாற்றையே மாற்றி எழுத வைத்தது. முதல் முறையாக இடது ஜனநாயக முன்னணி அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தும் வாய்ப்பை பெற்றது.

விவசாயிகளின் எழுச்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான விவசாயி களை திரட்டி மாபெரும் நடைப்  பயணம் நடந்த வரலாற்றை மறக்க முடியுமா? காலில் செருப்பில்லாமல் கொதிக்கும் தார் சாலையில் பாதம் பிளந்து ரத்தம் வடியும் போதும் நெடும்  பயணம் தொடர்ந்தது. மக்க ளின் கோரிக்கைகளுக்காக விவ சாயிகளின் ஒன்றுபட்ட போராட்  டத்திற்கு முன்பு அரசாங்கம் பணிந்தது. ஒன்றிய மோடி அரசு விவசாயி களை விளைநிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வகையில், அம்பானி, அதானிக்கு நிலங்களை எடுத்துக் கொடுக்க மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிராக சாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்களை கடந்து உழுபவனாக ஒன்றிணைந்த னர். கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே அடங்கி கிடந்தபோதும் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றினணந்து களத்தில் நின்றனர். கொட்டும் பனி, மழை, வெயில் இவற்றோடு, ராணுவம், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி, அடியாட்கள் போன்றவற்றையும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. விவசாயிகளுக்கு ஆதர வாக தொழிலாளி வர்க்கமும் கைகோர்த்தது. இடதுசாரிகளின் தார்மீக ஆதரவால் ஆளும் கார்ப்பரேட்களின் கைகூலிகளும் வேறு வழியில்லாமல் சட்டத்தை திரும்ப பெற்றனர். மக்கள் சக்திக்கு முன்னால் எல்லாம் அற்பம் என்பதே இந்த போராட்டம் கற்றுக்கொடுத்த படிப்பினை.

நந்தவனத்தை நட்டு               வளர்த்தவர்கள்
பாலைவனத்திற்கா குடிபோவது
கல்வி, வேலை வேண்டும்
வாழ்விடம் வேண்டும்
வாழும் உரிமை வேண்டும்

எமது வீட்டை இடிக்காதீர் என வலியுறுத்தி தென்சென்னை மாவட்டத்தில்  ஜூன் 10 முதல் ஜூலை 17 வரை கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. 37 நாட்களில் 200 குழுக்கள், 2000 ஊழியர்கள், ஒரு லட்சம் இல்லங்களில்  ஐந்து லட்சம் மக்களை சந்திக்க உள்ளனர்.   200 பிரச்சாரக் கூட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது,. மாவோ கூறியதைப்போல், மக்களிடம் பழகு, மக்களிடம் கற்றுக்கொள், அதை மக்களுக்கு போதனை செய். மக்களுக்காக பயணிப்போம். இதை நாம் செய்யத் தவறினால் இந்த அரசு மக்களாட்சி என்ற பெயரில், மக்களைச் சுரண்டி கொழிக்கும், பொரு ளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெரும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றிடும். இந்த நிலையை மாற்ற வெகுமக்களை அரசியல்படுத்தி, தொழிலாளி வர்க்க அரசை அமைக்க தேவையான பணிகளை செய்வோம்.