districts

img

மெரினா நீச்சல்குளத்தில் ஆனந்த குளியல்

சென்னை, மே 14-

    கோடை விடுமுறையையொட்டி, மெரினா நீச்சல் குளத்தில் இளைஞர்கள் ஆனந்தகுளியல் போட திரண்டனர்.

   சென்னை மெரினா கடற்கரை மணல்  பரப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்த மான பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த  நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை  7.30 மணி வரை இயங்கி வருகிறது. நுழைவு  கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50  டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

   கோடை விடுமுறையையொட்டி வெயிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் வாரஇறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீச்சல்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு புதிய தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மெரினா கடற்கரை நீச்சல் குளத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் சென்னையில் தற்போது கோடைவெயில் கொளுத்துவதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்திற்கு அலைமோதி வருகிறது. விடுமுறை தினமான மே 13 (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் மெரினா நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.