சென்னை,பிப்.16- மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் எடுத்த புகைப் படங்கள் அடங்கிய கண்காட்சி சென்னை அண்ணாநகர் வி. ஆர். வணிக வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. சென்னை புகைப்பட பியன்னேல் மூன்றாவது கட்டமாக இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில்"Hey!" என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் பாதிப்பு உடைய சிறார்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. சென்னை புகைப்பட பியன்னேல் அமைப்பு இதற்காக பயிற்சிப் பட்டறைகளை நடத்தி, இந்த குழந்தைகளுக்கு தனித்துவ மான புகைப்படங்களையும் சுயப்புகைப்படங்களையும் எடுத்து வெளிப்படுத்துவதற்கான திறன்களை கற்றுக் கொடுத்தது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆர்ஆர் டொன்னெல்லி நிறுவன சமூக பொறுப்பு நிதி தலைவர் அருண், இது போன்ற உன்னதமான நோக்கத்திற்கு உதவி செய்வது மகிழ்ச்சிய ளிப்பதாக கூறினார். குழந்தைகளின் படைப்பாற்றல் மெய்சிலிர்க்கச் வைப்ப தாக டாக்டர் எம்.ஜி.ஆர் சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் டாக்டர் லதா ராஜேந்திரன் தெரிவித்தார். வித்யா சாகர் நிறுவனர் பூனம் நடராஜன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.