திருவண்ணாமலை, ஆக.3-
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி எதிரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 9 ஏக்கர் பரப்ப ளவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் அமைக்கப் பட்டுள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவை வருகிற 8 ஆம் தேதி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார். பூங்கா நுழைவு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் பூங்காவை தூய்மை யாக பராமரிக்க பயன்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். கிரிவலப்பாதையிலுள்ள தோட்டக்கலை துறை பூங்கா நகர மக்களுக்கு மிகச் சிறந்த பொழுது போக்கு மையமாகவும், குழந்தைகள் ஓடி, ஆடி விளை யாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடமாகவும் அமைந்துள்ளது.