அம்பத்தூர், டிச. 11- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் 8ஆவது வார்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் உள்ள சில வகுப்பறைகள், கழிவறையை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் பள்ளியின் பின்புறம் உள்ள 10ஆவது தெருவில் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகிறது. தற்போது பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அஞ்சு கின்றனர். மேலும் 10ஆவது தெருவில் வசிக்கும் மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்குள் இருக்கும் செடி கொடிகளை முறையாக அகற்ற வேண்டும், முறையான கழிவு கால்வாய் அமைக்க வேண்டும், தினசரி குப்பைக் கழிவு களை அகற்ற வேண்டும் என்று பெற்றோர் களும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறை யும் மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் மேற்கண்ட குறை களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.