districts

img

மாதம்தோறும் குறைதீர் முகாம் நடத்தி மக்கள் குறைகள் களையப்படும்

அம்பத்தூர், பிப். 16- மாதம்தோறும் குறைதீர் முகாம் நடத்தி குறைகள் களையப்படும் என கொரட்டூர் 84ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் விஜயகு மார் வாக்குறுதி அளித்துள் ளார். சென்னை மாநகராட்சிக் குட்பட்ட அம்பத்தூர் மண்ட லம் 84ஆவது வார்டில் கொரட்டூர், பட்டரைவாக்கம், ஏரிக்கரை, பெரியார் நகர், கச்சனாங்குப்பம், பாரதி நகர், ரெட்டித் தெரு, தமிழ் நாடு வீட்டுவசதி வாரியம், ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  5 ஆயிரத்திற்கும் மேற்பட் டோருக்கு பட்டா இல்லை. பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருந்தாலும் பல பகுதிகளுக்கு இன்னும் இணைப்பு வழங்கவில்லை. பல பகுதிகளில் மெட்ரோ  குடிநீர் குழாய் அமைக்கப் படவில்லை. அமைக்கப்பட்ட இடங்களிலும் பல ஆண்டு களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. சாலை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  இந்த வார்டில்  ஆர்.விஜய குமார் போட்டியிடுகிறார். தாங்கள் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள் என்று  அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் தொடர்ச்சியாக,“ பகுதி  மக்களின் பிரச்சனைக ளுக்காக போராடி வருகி றேன். இங்குள்ள சில  குடும்பங்களுக்கு இன்னும்  பட்டா வழங்கப்படாமல் உள்ளன. அனைவ ருக்கும் பட்டா கிடைப்பதற் கான முயற்சியை மேற் கொள்வேன்’’ என்றார். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகை யில் படிப்படியாக மெட்ரோ குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்க ளில் முறையாக மழைநீர்  வடிகால்வாய் அமைக்கப்பட வில்லை. வட்டம் முழுவதும் வடிகால்வாய் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இங்கு சமூக நலக்கூட மும், விளையாட்டு திடலும் அமைத்து தருவேன் என்றார். இங்குள்ள பூங்காக் களை மேம்படுத்தி உடற்பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் அமைத்துக் கொடுப்பேன். அம்பத்தூர் தொழிற்பேட்டையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் இளைஞர்களுக்கு தேவை யான வகுப்புகள் எடுக்கப்ப டும். அரசு பள்ளியில் பயிலும்  10 மற்றும் 12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு பொதுத்  தேர்வின் போது இலவச மாக சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுக்கப்படும். மேலும் குற்றச் சம்பவங் களை தடுக்கும் வகையில் பொதுமக்கள், வணிகர்கள் உதவியுடன் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். முக்கிய சாலைகளின் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பேன். நூலகத்தையும், அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தி விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் அங்காடி வளாகம் அமைக்க நடவடி க்கை மேற்கொள்வேன். மாதத்திற்கு ஒருமுறை குறை தீர்க்கும் முகாம் நடத்தி குறிப்பிட்ட கால இடை வெளியில் அந்த குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள் வேன். இங்குள்ள உட்புறச் சாலைகளை படிப்படியாக தார் சாலையாக மாற்று வேன். குப்பைக் கழிவுகளை  தினசரி அகற்ற நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக அரசின் நலத்திட்ட உதவி களை எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு  மக்களுக்கும் பெற்றுத் தருவேன். மக்களோடு மக்க ளாக நின்று அவர்களின் வாழ்க்கை தரம்மேம்பட பாடுபடுவேன் என்றார்.