சிதம்பரம், ஆக.11- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறையின் 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை முதல்வர் சி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வேதிப் பொறியியல் துறை தலைவர் சரவணன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் துவக்கி வைத்தார். பத்மஸ்ரீ பேராசிரியர் ஜிடி யாதவ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் வேதிப் பொறியியல் பல்துறை என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் சார்பில், வேதிப் பொறியியல் துறை ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் காசோலை வழங்கினர்.