சென்னை, மே 8- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குட்கா, மாவா புகை யிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி நாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக 71 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 73 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுளை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை காவல் துறையினர் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த (மே 1 முதல் 7 ஆம் தேதி வரை) ஒரு வாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 54.54 கிலோ குட்கா புகை யிலை பொருட்கள், 19.48 கிலோ மாவா மற்றும் 1 இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. மேலும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை தடை செய்யப் பட்ட குட்கா, மாவா புகை யிலை பொருட்கள் வழக்கு களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 22 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 285 கடைகளுக்கு பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வி யில் சேருவதற்கான நடை முறைகளை பின்பற்றி வரு கின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.