கடலூர், ஏப்.19- கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மக்களவைத் தொகுதியில் விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி (தனி), குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில்வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சிதம்பரம் மக்களவைத் தொகுதி யில் புவனகிரி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்நிலையில் கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலு வலர்கள், பழுதை சரி செய்ய முயன்றும், அவர்களால் சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டதும், சுமார் 1 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கி, விறு விறுப்பாக நடந்தது. இதேபோல் கடலூர் வண்ணாரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், தூக்கணாம் பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தி லேயே வாக்குப்பதிவு எந்திரங்கள் பழு தானது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்த பிறகு சுமார் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் மதியம் 1 மணி அள வில் வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க வந்திருந்த ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அந்த எந்திரத்தை சரி செய்த பிறகு, சுமார் 75 நிமிடம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கி நடந்தது. இதேபோல் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரண மாக கண்டக்காடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சுமார் 15 நிமிடம் தாமதம் ஆனது. கடலூர் மக்களவைத்தொகுதியில் மாலை 7 மணி நிலவரப்படி 72.40 வாக்குகள் பதிவானதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.