செங்கல்பட்டு மாவட்டத்தில் 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
செங்கல்பட்டு, மார்ச் 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் 702 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் ச.அருண் ராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளர்களாக திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கான பொது பார்வையாளராக அபிஷேக் சந்திரா (கைபேசி எண்: 91505 95312) நியமிக்கப் பட்டுள்ளார். திருப்பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தேர்தல் காவல் பார்வையாளர் பரத் ரெட்டி பொம்ம ரெட்டி, (கைபேசி எண் : 63855 15308) திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக சந்தோஷ் ஷரன், (கைபேசி எண் : 99403 53325) ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது குறை களையோ அல்லது ஏதேனும் சந்தேகம் இருப்பின் தேர்தல் பார்வையாளர்களின் கைபேசி எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தினை பொருத்தவரையில் மொத்தம் 2825 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக சோளிங்கநல்லூர் தொகுதியில் 234 வாக்குச்சாவடிகளும், பல்லாவரம் தொகுதி யில் 89 வாக்குசாவடிகளும், தாம்பரம் தொகுதியில் 85 வாக்குசாவடிகளும், செங்கல்பட்டு தொகுதியில் 130 வாக்கு சாவடிகளும் திருப்போரூர் தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், செய்யூர் தொகுதியில் 46 வாக்குச்சாவடிகளும், மதுராந்தகம் தொகுதியில் 41 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 702 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக அறியப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையங்களில் சுகாதார மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது வழக்கு
சென்னை, மார்ச் 29- சென்னை ஆழ்வார் பேட்டை சேமியர்ஸ் சாலை யில் உள்ள தனியார் மதுபான விடுதியில் வியாழனன்று முதல் மாடி யின் மேல்தளம் இடிந்து விழுந்தது.இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மதுபான விடுதி கட்டி டம் இடிந்தது தொடர் பாக அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 304-ஐ.பி.சி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த விபத்து தொடர் பாக 12 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
சென்னை, மார்ச் 29- சென்னை ஜாபர்கான்பேட்டையில் தமிழிசை சவுந்தர ராஜன் பிரச்சாரத்தில் அனுமதியின்றி சுமை ஆட்டோவை பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மக்களவைத் தேர்தலில் பாஜக தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், ஜாபர்கான்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனர். அப்போது தமிழிசை செளந்தரராஜன் பிரசாரத்துக்கு ஒரு சுமை ஆட்டோவில் பேண்ட் வாத்தியக் குழுவினர் இசைத்து வந்தனர். ஆனால் அந்த சுமை ஆட்டோவை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கார்த்திகேயன், குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பாஜக சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளர் சரவணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அனுமதியின்றி பயன்படுத்தப் பட்ட சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை, மார்ச் 29- சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வரை இயக்கப் படும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் வரை 3 நாட்களுக்கு நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் வரும் ஏப்ரல் 5 முதல் 7ஆம் தேதி வரை பைபிள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பயணிகளின் வசதிக்காக கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் ரயில்கள் மேற்கண்ட மூன்று நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9, மாலை 3.05 மணி ரயில்கள், மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10.45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும் என்றும் கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மாலை 4.45 மணி ரயில், எளாவூரில் இருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாம்பலத்தில் மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை,மார்ச் 29- மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி உள்ளது. வியாழனன்று இரவு 10.30 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் “மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு குண்டு வைத்து உள்ளேன், சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி உடனடியாக அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இந்த பள்ளி கடந்த 2021-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கிய இந்துக்கள்
சென்னை, மார்ச் 29- சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்களை கடந்த 36 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் ‘சிந்திஸ்’ எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகின்றனர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு சேவை செய்வோம் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சென்னை மயிலாப்பூரில் சுபிதர் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர். தங்களது அறக்கட்டளை வளாகத்தில் இந்து கடவுள்கள் மட்டுமல்லாமல் ஏசு கிறிஸ்து, மாதா, அந்தோணியார் படங்களை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.சுபிதர் அறக்கட்டளை மூலம் தான் 36 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் இவர்கள் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வருகின்றனர். இவர்களது மயிலாப்பூர் அறக்கட்டளையில் தயாராகும் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மாலை 5.30 மணிக்கு பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.